அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

223 0

நாட்டில் கொரோனா தொற்று இல்லாத இடங்கள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கூட புதிய நோயாளர்கள் உருவாகுவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

காலி, பொலனறுவை, கண்டி, மற்றும் இரத்தினபுரி போன்ற பகுதிகளில் புதிதாக நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய சிறிய கொத்தணிகள் உருவாகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் வெள்ளவத்தையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட 300 பிசிஆர் சோதனைகளின் போது 12 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இந்த நிலை குறித்து கவனம் செலுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவும் தெரிவித்துள்ளது.