கொவிட்-19 ஒழிப்பிற்கான செயற்றிட்டத்தின்போது மருத் துவ நிர்வாகிகள் வழங்கும் ஒத்துழைப்பைத் தான்
வரவேற்பதாகச் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி யாரச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மருத்துவ நிர்வாகிகள் சபையின் 27ஆவது வருடாந்த அமர்வின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
சுகாதாரத் துறையின் நிறை குறைகளை அறிந்து அது குறித்து ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வை வழங்குமாறு அமைச்சர் மருத்துவ நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டார்.