வவுனிக்குளத்துக்குள் ஜீப்; மூவரை காணவில்லை

206 0

முல்லைத்தீவு வவுனிக்குளம் வாவியில் ஜீப் விழுந்ததில் 2 வயது சிறுமி உட்பட மூவரை காணவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாகனத்தில் குடும்பத் தலைவர் ஒருவரும் அவருடைய பிள்ளைகள் மூவரும் பயணம் செய்துள்ள நிலையில் வாகனம் விபத்துக்குள்ளான நிலையில், சிறுவன் ஒருவன் வாகனத்தில் இருந்து வெளியே வந்து குளத்தில் நீந்தி கரை சேர்ந்துள்ளார்

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கடற்படையினர் பொதுமக்கள் இணைந்து வாகனத்தை குளத்தில் இருந்து மீட்டு எடுத்த   போது வாகனத்தில் இருந்து சிறுவன் ஒருவன் சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இதனைவிட வாகனத்தின் உடைய சாரதியான 37 அகவையுடைய கிருஸ்ணபிள்ளை ரசீந்திரன்,அவரது மூன்று வயது மகளாக ரசீந்திரன் சார்ஜனா ஆகியோரை தேடும்; நடவடிக்கையில் பொலிஸார், படையினர், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

விபத்தின் போது நீரில் மூழ்கிய ரவீந்திரகுமார் சஞ்சீவன் என்ற 13 அகவையுடைய சிறுவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மாங்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.