குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது

233 0

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களில் ஈடுபட்டு வந்த ரத்மலான ரொஹா என்பவரின் உதவியாளர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வஸ்கடுவ பகுதியில் வைத்து குறித்த நபர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவரும் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.