சிலாபத்தில் வள்ளம் கவிழ்ந்து மீனவர் மாயம்

291 0

vallamசிலாபம் கடலில் வள்ளம் ஒன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிலாபம் கடற்பகுதிக்கு அண்மித்த பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மீனவர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுவிட்டு திரும்பும் போது இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

வெல்ல, கொலனிய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய மீனவர் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், காணாமல் போன மீனவரை தேடும் பணிகள் இடம்பெறுவதாகவும் சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்