நூதனசாலைகள் மீண்டும் திறப்பு

278 0

மத்திய கலாசார நிதியத்திற்கு உட்பட்ட நூதனசாலைகள்  எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் மீளத் திறக்கப்படும் என மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது.

மத்திய கலாசார நிதியத்திற்குச் சொந்தமான அனைத்து நூதனசாலைகளும் எதிர்வரும் 20 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முதல் உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்படும் என்று மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக் காரணமாக இந்த நூதனசாலை கள் கடந்த சில நாட்களாக மூடப் பட்டுள்ளமை குறிப் பிடத்தக்கது.

 

இருப்பினும், எதிர்காலத்தில் விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என்பதால், மத்திய கலாசார நிதியத்தால் நிர்வகிக்கப்படும் பொலன்ன றுவை, சீகிரியா, கதிர்காமம், காலி, கண்டி மற்றும் அனுரா தபுரம் ஆகிய அனைத்து அருங் காட்சியகங்களும் சுகாதார பரிந் துரைகளின் கீழ் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழ மை முதல் திறக்கப்படும்.

மத்திய கலாசார நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை யிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.