கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அளுத்கமை நகரிலுள்ள ஐந்து வர்த்தக நிலையங்களை, தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேருவளை சகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஐவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் 10ஊழியர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.