சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 63 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணபட்டுள்ளவர்களில் சிறைச்சாலை அதிகாரிகள் மூவரும் உள்ளடங்குகின்றனர்.
அத்துடன் 56 ஆண் கைதிகளும் 4 பெண் கைதிகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 279 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில் ஆயிரத்து 189 பேர் வூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.