வாகனம் மோதியதில் தாயும் குழந்தையும் பலி

278 0

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் பஹலபலல்ல பகுதியில் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் தாயும் குழந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த கெப் ரக வாகனத்தில் 11 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 8 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகன ஓட்டுனர் உட்பட மூவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.