மஹர மோதல் – நிபுணர் குழுவின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

248 0

மஹர சிறை மோதலில் உயிரிழந்த 11 பேரின் பிரேத பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்ட விசேட அறிக்கை இன்று (16) மஹர நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் நான்கு பேரின் பூதவுடல்களை அடக்கம் செய்ய இடமளிப்பதா என்பது தொடர்பான தீர்ப்பு இன்று மதியம வழங்கப்படவுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மோதல் காரணமாக 11 கைதிகள் உயிரிழந்த நிலையில் அவர்களில் 8 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் உயிரிழந்த நபர்களில் பிரேத பரிசோதனையை நிபுணர் குழுவினால் மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கடந்த 8 ஆம் திகதி நிதிமன்றில் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.