யாழ் வல்லைப்பாலத்தில் விபத்து-இருவர் காயம்

349 0

accidentயாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப்பாலத்தில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர்.யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லைப்பாலத்தில் முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், கன்டர் ரக வாகனம் என்பனவே விபத்துக்குள்ளாகின.

யாழ்ப்பாணத்தில் இருந்து நெல்லியடி நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மழை காரணமாக வல்லைப் பாலத்திற்கு முன்னாள் வீதியோரமாக தரித்து நின்றபோது பின்னாள் வந்த கன்டர் ரக வாகனம் தரிந்து நின்ற முச்சக்கர வண்டி மற்றும், மோட்டார் சைக்கிளுடன் மோதியே விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிளில் வந்த பெண்ணும் ஆணும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.எனினும் முச்சக்கர வண்டியின் சாரதிக்கும் கன்டர் ரக வாகன சாரதிக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.