செல்வம் அடைக்கலநாதனின் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய அரசியல் தலைவர்கள்(படங்கள்)

315 0

selvam-3நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் மரணச்சடங்கில் அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மன்னாருக்கு இன்று காலை விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர், நாடாளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் மரணச் சடங்கில் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் தந்தையான சித்த வைத்தியர் அடைக்கலம் அமிர்தநாதன் தனது 83ஆவது வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரிலுள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலை விசேட வானூர்தி மூலம் மன்னாருக்கு வருகைதந்த சபாநாயகர் கரு ஜெயசூரிய மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் செல்வம் அடைக்கலநாதனின் தந்தையின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இவர்களுடன் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், ஸ்ரீதரன், யோகேஸ்வரன், வியாழேந்திரன் ஆகியோரும், வடக்கு மாகாண சபை மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

selvam selvam-6 selvam-5 selvam-4 selvam-3 selvam-2 selvam-1