சாதாரணதர பரீட்சை நாளை – இறுதி வாய்ப்பு இன்று

304 0

gce-o-l-exam-810x608கல்வி பொது தாராதர சாதாரண தர பரீட்சையில் தோற்றவிருக்கும் நிலையில், இதுவரை தேசிய அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் இன்று அதனை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்காக ஆட்பதிவுத் திணைக்களத்தில் விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திணைக்கள ஆணையாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ள கல்வி பொது தாராதர சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.