களுபோவில வைத்தியாசாலையில் பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியரொருவருக்கும் கொரோனா!

234 0

களுபோவில போதனா வைத்தியாசாலையில்  பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியரொருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

களுபோவில போதனா வைத்தியாசாலையின் 15பி வோர்ட்டில் பணியாற்றிய வைத்தியர் இருவருக்கும் தாதியரொருவருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 663ஆக காணப்படுகின்றது.

இவர்களில், நான்காயிரத்து 399 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதுடன் இன்னும் ஆறாயிரத்து 244 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை 20 பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.