வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் யார் ?

276 0

unnamed-4வடமாகாண எதிர்க்கட்சித்தலைவர் யார் என்ற சர்ச்சை தொடர்பான முடிவு எதிர்வரும் 6 ஆம் திகதி தெரிய வரும் என வடமாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவராக சின்னத்துரை தவராசா தற்போது பதவி வகித்து வருகிறார். தவராசாவை வடமாகாண எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறு ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உத்தியோக பூர்வ கடிதம்  ஒன்றை ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளருக்கு அனுப்பி வைத்திருந்தார். இதில் தவராசாவை நீக்கி கிளிநொச்சி மாவட்டத்தின் வடமாகாண சபை உறுப்பினராக இருந்துவரும் தவநாதனை நியமிக்குமாறு வடக்கு மாகாண சபைத் தலைவர் சி.வி.கே சிவஞானத்துக்கு சுதந்திரக்கட்சியினரால் அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை தற்போதைய எதிர்கட்சித் தலைவர் தவராசாவையும் தவநாதனையும் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் அழைத்து பேச்சு நடத்தியதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது தொடர்பான முடிவு வருகின்ற 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஒன்றுகூடவுள்ள வட மாகாணசபைக்கூட்டத்தில்  அறிவிக்கப்படும் எனவும் வடமாகாண சபை வட்டாரங்கள் தெரிவித்தன.