மன்னார் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம்; இரண்டு சிறுவர்கள் படுகாயம்

285 0

மன்னார் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் ஒன்றில் சிறுவர்கள் இருவர் காயமடைந்துள்ளார்கள். மன்னார் மடு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட இரணை இலுப்பைக்குளம் பகுதியில் இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வெடிப்புச் சம்பவத்தினால் படுகாயமடைந்த இரு சிறுவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் 12 மற்றும் 10 வயதுடைய இரு சிறுவர்களே படுகாயமடைந்துள்ளனர்.

போரின் போது பயன்படுத்தாமல் கைவிட்டுச் சென்ற கைக்குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மடு காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.