சீனாவில் கழிவு நீர் வாய்க்காலின் மூடி வெடித்ததில் சிறுவனொருவன் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
கான்ஷூ மாகாணத்தின் வீதியோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவன் கழிவு நீர் வாய்க்காலின் மூடியில் பட்டாசு வைத்ததாகக் கூறப்படுகின்றது.
இதன்போது கழிவு நீர் வாய்க்காலின் மூடி வெடித்ததில் குறித்த சிறுவன் தலைகீழாகத் தூக்கி வீசப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டள்ளது.
இச் சம்பவத்தில் அச் சிறுவன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாகவும் கழிவு நீர் வாய்க்காலில் மெதேன் வாயு அதிகமிருந்ததால் இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.