அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) புளோரிடாவில் தமது வாக்கை பதிவு செய்தார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் போட்டியிடவுள்ளதோடு அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் ஜோய் பிடன்(Joe Biden) களமிறங்கியுள்ளார்.
ட்ரம்ப், ஜோ பைடனுக்கு இடையே கடும் போட்டி நிலவிவரும் நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல மாநிலங்கள் தபால் மூல வாக்கெடுப்புக்கள் நடைபெற்றுவருகின்றன
இந் நிலையில் புளோரிடாவிலுள்ள நூலகத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் ட்ரம்ப் தமது வாக்கை பதிவு செய்தார்.
முகக்கவசம் அணிவதை விரும்பாத ட்ரம்ப் அன்று முகக்கவசம் அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்களித்த பின்னர் புன்னகையுடன் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் ”ட்ரம்ப் என்ற நபருக்கு தாம் வாக்களித்ததாகத்” தெரிவித்திருந்தார்.