தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்!

228 0

தொழில் திணைக்களத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழில் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி.கே பிரபாத் சந்திரகீர்த்தியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல், ஊழியர் சேம இலாப நிதியத்தைப் பெறும் பயணாளர்களின் விண்ணப்பங்கள், அருகிலுள்ள தொழில் திணைக்களத்தின் அலவலகங்கள் ஊடாக மாத்திரமே பெற்றுக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சேவையைப் பெற்றுக் கொள்ள விரும்பும் பயனாளர்கள், முன்கூட்டியே தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, 0112 36 89 04 அல்லது 0112 36 89 11 என்ற இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.