மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் களுவாஞ்சிக்குடி பொலிஸ் உத்தியோத்தர் சடலமாக மீட்பு (காணொளி)

397 0

batti-bodyமட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மட்டக்களப்பு பாலமீன்மடு பொலிஸ் பிரிவுக்குற்பட்ட முகத்துவாரம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவில் கடைமையாற்றும் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய சிவதாசன் விஜிதரன்  என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் உடலில் வெட்டுகாயங்கள் இருப்பதாகவும் இதன் காரணமாக உயிரிழந்தவர் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவரது மரணம் தொடர்பான விசாரணைகளை  மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.