ஜெனீவா வாக்குறுதியில் 11 வீதமே நிறைவேற்றப்பட்டுள்ளது

475 0

mangala-unhrcஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளில் 11 வீதமே சிறீலங்கா அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்டியங்கும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

2011ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் 20 வீதம் மாத்திரமே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த அமைப்புத் தெரிவித்துள்ளது.ஜெனீவாவில் சிறீலங்கா ஒப்புதலளித்த வாக்குமூலங்களை நிறைவேற்றுவதில் மந்த நிலையே காணப்படுகின்றது.

30/1 தீர்மானத்தில், கொடுக்கப்பட்ட 36 வாக்குறுதிகளில் 4 வாக்குறுதிகள் மாத்திரமே முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 22 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் மிக மோசமான நிலையே காணப்படுகின்றது.

61.1 வீதமான விடயங்களில், முன்னேற்றங்கள் மிக மோசமாக உள்ளன. 25 வீதமான விடயங்களில் பகுதியளவிலான முன்னேற்றங்களே காணப்படுகின்றன. 2.8 வீதமான விடயங்களில் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. 11.1 வீதமான விடயங்களை மாத்திரமே அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் 189 பரிந்துரைகளில், 20 வீதம் மாத்திரமே, நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 57 வீதமான பரிந்துரைகள் பகுதியளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 22 வீதமான பரிந்துரைகள் விடயத்தில் மோசமான நிலை காணப்படுவதாகவும் வெரிட்டே ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a comment