ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றம்

20691 0

201607041109276517_Ram-Kumar-speaks-well-Royapettah-hospital-Teen-information_SECVPFராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும் என்று ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்தார்.

சுவாதி கொலையாளி ராம்குமார் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவனுக்கு சிகிச்சை அளிக்க தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லையில் இருந்து அழைத்து வரப்பட்டுள்ள ராம்குமார் உடல்நிலையை இன்று காலை டாக்டர்கள் குழு பரிசோதித்தது. அவரது உடல்நிலை நன்றாக உள்ளது. எந்த பிரச்சினையும் இல்லை. நெல்லையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது திரவ உணவு அளித்துள்ளனர். ஆனால் இன்று திட உணவு கொடுக்கும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று காலை ராம்குமாருக்கு இட்லி மற்றும் இடியாப்பம் வழங்கப்பட்டது.

ராம்குமார் இப்போது நன்றாக பேசுகிறார். அவர் குரலில் வேறு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. கழுத்தில் பிளேடால் ஆழமாக வெட்டி உள்ளதால் 18 தையல் போட்டுள்ளனர்.அந்த தையல் போட்ட பகுதியில் ரத்த கசிவு எதுவும் இல்லை. அந்த காயம் மிகவும் வேகமாக ஆறி வருகிறது.தையலை எப்போது பிரிப்பது என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. ராம்குமார் உடல் நிலை தொடர்ந்து நல்ல முன்னேற்றமாக இருப்பதால் விரைவில் கழுத்தில் போடப்பட்டுள்ள தையல் பிரிக்கப்படும். தொடர்ந்து அவரை டாக்டர்கள் குழு கண்காணித்து வருகிறது.இவ்வாறு ராயப்பேட்டை அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு தெரிவித்தார்.

Leave a comment