இலங்கை அரசியல் யாப்பில் இந்திய உள்ளீடுகள்

535 0

images-2-720x480இலங்கையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுகின்ற நிலையில், இந்தியாவின் அரசியல் யாப்பில் இருந்தும் அதற்கான உள்ளீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசியல் யாப்பு தினத்மை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்பு தொடர்பில் புதிய அரசியல் யாப்பில் இலங்கை அவதானம் செலுத்துகிறது.

இந்தியாவின் அரசியல் யாப்பு அதற்கு ஏற்பவே தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியாவின் பி.ரீ.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.