பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென தீ

471 0

AR-160309486.jpg&NCS_modified=&imageversion=1by1&exif=பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட ஆய்வகத்தில் திடீரென ஏற்பட்ட தீயால் அது முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் பீடத்தில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள ஆய்வகத்தில் நேற்று இரவு இந்த தீ பரவியுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தீ ஏற்பட்டதற்கான காரணம் அறியப்படவில்லை. இதேவேளை ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நேற்றுமாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 மாணவிகள் தங்கியுள்ள பகுதிக்கு கள்வன் ஒருவன் புகுந்தமை தொடர்பிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.  நான்கு மாடிக்கட்டிடங்களை கொண்ட இந்த தங்குமிடத்தில் புகுந்த கள்வன், மாணவிகளின் 8 கையடக்க தொலைபேசிகளை களவாடி சென்றுள்ளார்.

தங்குமிடத்தின் ஜன்னல்களை உடைத்தே கள்வன் உள்நுழைந்துள்ளான். இதன்போது அவர், மாணவிகளுக்கு தொந்தரவுகளை செய்யவில்லை.கள்வனை கண்ட மாணவி ஒருவர், நடுநிசியில் திடீரென்று எழுந்து கூச்சலிட குறித்த கள்வன் தப்பிச்சென்றுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுகிறது.

இதன்போது ஒரு பெண் பாதுகாப்பு ஊழியரே பணியில் இருந்துள்ளார். எனினும் அவர் உறக்கத்தில் இருந்தமையால் அவரால் கள்வனை பிடிக்கமுடியவில்லை என்று பல்கலைக்கழக மாணவர் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment