சிறிலங்காவில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி!

303 0

சிறிலங்காவில் ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் மாலைதீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 160ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதுடன் பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மேலும், 179 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 12பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.