பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கின்றது!

216 0

பூஸ்ஸ  சிறைச்சாலையில்  உள்ள கைதிகள் சிலர் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த நிலையில் கஞ்சிபானை இம்ரான், பொடிலெசி, வெலே சுதா, உள்ளிட்ட கைதிகள்  போராட்டத்தில் இருந்து விலகி செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளை பார்வையிடுவதற்கு தற்காலிக தடைவிதிக்கப்பட்டமை, தொலைபேசி பாவனை நிறுத்தப்பட்டமை உள்ளிட்ட கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து கைதிகள்  உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

கடும் குற்றங்களின் அடிப்படையில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள  40 கைதிகளுள் 32 கைதிகள் இந்த போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.