மகாகவி பாரதியாரின் 99வது நினைவு தினம் வவுனியாவில் அனுஷ்டிப்பு

218 0

மகாகவி பாரதியாரின் 99வது நினைவு தினம், வவுனியா- குருமன்காடு பகுதியிலுள்ள அவரது உருவச்சிலைக்கு முன்பாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபையின் உபதலைவர சு.குமாரசாமி தலைமையில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்நிகழ்வில் பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரது தமிழ் பற்று மற்றும் சுதந்திர வேட்கை தொடர்பான கருத்துரைகளை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.சிறினிவாசன் ஆற்றியிருந்தார்.

குறித்த நிகழ்வில் நகரசபை உறுப்பினர்களான நா.சேனாதிராசா, க.சந்திரகுலசிங்கம், ரி.கே.இராஜலிங்கம், க.சுமந்திரன், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எஸ்.வாசன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார், வெளிச்சம் அறக்கட்டளையின் தலைவர் பா.லம்போதரன், வவுனியா மாவட்ட பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.