ஞானசார தேரரின் வாக்குமூலத்தை பதிவு செய்த மௌலவி பதவி விலகினார்!

220 0

கலகொடஅத்தே ஞானசார தேரர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய போது அவரின் வாக்குமூலத்தை கைப்பேசியொன்றில் பதிவு செய்த மௌலவி அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் உதவி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பில் அவரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது.

சட்டத்தரணி ஒருவரின் ஊடாக கைப்பேசி ஒன்றை எடுத்துச் சென்று ஞானசார தேரரின் வாக்குமூலத்தை இரகசியமாக ஒலிப்பதிவு செய்த சம்பவம் தொடர்பில் மௌலவி பொலிஸாரின் பொறுப்பின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.

எம்.எம்.எம்.முர்ஷித் என்ற குறித்த மௌலவி குறித்த சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு குறித்த பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.