20 ஆவது திருத்தம் குறித்து சந்திம வீரகொடி தெரிவித்தது என்ன?

263 0

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் முன்வைக்கப்பட்ட யோச னைப்படி ஜனாதிபதியினால் தேர்தல் ஆணையத்தை நியமிப்பதை விட பாராளுமன்றத்திற்கு இது தொடர்பான அதிகாரத்தை வழங்குவது மிகவும் பொருத்தமானது என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

அத்துடன், இவ்வாறு அதிகாரத்தைப் பெற்றுக்கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் திருத்தம் தொடர்பாக மக்கள் தனிப்பட்ட முறையில் பிரதிநிதித் துவப்படுத்தும் வகையில் தங்களின் கருத்துகளை முன்வைப்பார்கள் என தான் நம்புவதாக ஊடக சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.