20வது திருத்தத்துக்கு எதிரான நடவடிக்கை குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும்

231 0

20வது திருத்தத்துக்கு எதிராக என்ன நடவடிக்கையை எடுப்பது என்பது குறித்து இந்த வாரம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கட்சியின் நாடாளுமன்ற குழு இந்த வாரம் சந்திக்கவுள்ளது அதன் போது இது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் 20வது திருத்தத்தை எதிர்க்கின்றோம் என குறிப்பிட்டுள்ள மாவை சேனாதிராசா இந்த வாரம் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் இடம்பெறவுள்ளது அதன் போது இது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

20வது திருத்தத்துக்கு எதிரான சட்டநடவடிக்கை குறித்தும் ஆராயப்படும் ஏற்கனவே எங்கள் சட்டத்தரணிகளுடன் இது குறித்து ஆராய்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார் ன் உறுப்பினர்கள் அதற்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் 20வது அமர்வு முன்வைக்கப்படும் என்பதன் அடிப்படையிலேயே அவ்வேளை ஆதரவு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்

20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்படுவதை நியாயப்படுத்தியுள்ள பசில் ராஜபக்ச மக்கள் அதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்கியுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.