சிறிலங்காவில் கம்பளை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட போத்தலப்பிட்டிய பிரதேசத்தில் நேற்று (06) மாலை போதைப் பொருள் பொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதன்போது கேரளா கஞ்சாவை விற்பனை செய்வதற்காக வைத்து இருந்த 40 இற்க்கு மேற்பட்ட கேரளா கஞ்சா பெக்கட்டும் மற்றும் பெக்கட் செய்ய வைத்து இருந்த கேரளா கஞ்சாவையும் பொலிஸார் கைப்பற்றினர்.
குறித்த நபர்கள் நீண்ட நாட்களாக ரகசியமாக கேரளா கஞ்சாவை விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கேரளா கஞ்சா பெக்கட் ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்ததாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.