பழமை வாய்ந்த வாள்கள் நான்குடன் ஒருவர் கைது

278 0

வடலியடைப்பு பகுதியில் பழமை வாய்ந்த வாள்கள் நான்குடன் ஒருவரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) இரவு, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவரிடம் மீட்கப்பட்ட 4 வாள்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த விவகாரம் தொடர்பாக யாழ்ப்பாணம் சிறப்பு அதிரடிப் படையினருக்கு தெரியவந்ததையடுத்து, வாள்களை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சந்தேகநபர், அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.