அம்பாறை மாவட்டத்தின் இரு வேறு பகுதிகளில் வெடிபொருட்கள் மீட்பு

570 0

திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாவட்டாய் என்னும் பிரதேசத்தில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி அன்று காணி ஒன்றில் புதையுண்டிருந்த ரி-81 மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டு விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த காலங்களில் தமிழீழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக இருந்த கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் நேற்று (23) பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து விமானப் படையினரினால் யுத்த காலங்களில் உபயோகிக்கப்பட்ட வெடிபொருள் ஒன்றின் பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வெடிபொருளை ஆராய்ந்து உரிய அனுமதியை பெற்று செயலிழக்க செய்ய பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.