சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோரின் அரசியலை தோற்கடிக்க வேண்டும்

327 0

தமிழ்த் தேசியக் கூட்டடைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் இனவாத அரசியலை தோற்கடிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

ஹோமாகமயில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும்,

“திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான் விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன. அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது.

ஆனால், விக்னேஸ்வரனுக்கு அதற்கான தகுதி கிடையாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர். இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகத்தைத்தான் அவர் அரங்கேற்றி வருகிறார்.