இதுவரை சிறிலங்காவில் 2 இலட்சம் பேருக்கு PCR பரிசோதனை

274 0
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவுவதைத் தடுக்கும் நோக்கில் நேற்று (23) மட்டும் இலங்கையில் 1,610 பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் இதுவரை நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை 205,707 என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேள, முப்படையினர் நடத்தும் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து இன்று (24) 1,212 பேர் வெளியேற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதுவரை 31,541 பேர் தனிமைப்படுத்தல் மையங்களில் இருந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், முப்படையினர் நடத்தும் 58 தனிமைப்படுத்தல் மையங்களில் 7,620 நபர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.