ஐ.தே.க யின் தலைமைத்துவத்தை ஏற்கத் தயார் – கரு ஜயசூரிய

255 0

ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை வழங்கும் சவாலை ஏற்கத் தான் தயாராக இருப்பதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கட்சியின் தற்போதைய தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் கட்சி மூத்தவர்களுக்கு இந்த விடயம் தொடர்பாகவும் அறிவித்துள்ளதாக அறிக்கை ஒன்றை வௌியிட்டு கரு ஜயசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அதில் “தற்போது கட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பநிலையினை கருத்திற் கொண்டு, பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக கட்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்காக ஐக்கிய தேசிய கட்சிக்கு தலைமைத்துவத்தை பொறுப்பேற்க என்னால் முடியும். கட்சி மற்றும் நாட்டின் எதிர்காலம் மற்றும் நாடு, நியாயமான மக்கள் சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து கடமைகளுக்கும் பொறுப்புகளுக்கும் தைரியமாக முகம்கொடுப்பேன்” என கூறியுள்ளார்.