வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை!

247 0

2021 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறிப்பாக  தேசிய அடையாள அட்டை  உரித்துடைய அனைத்து பிரஜைகளும்  தங்களது பெயர்களை தேர்தல் பட்டியலில் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு  தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

பொதுமக்கள் பெயர் பட்டியலை பூர்த்தி செய்து கிராம அலுவலகரிடம் அதனை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு   தெரிவித்துள்ளது.

பொதுத்தேர்தல் காரணமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் புதிய வாக்காளர் பட்டியலை உறுதி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும்  தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.