விக்னேஸ்வரன் ஆற்றிய உரை குறித்து ஆராய்ந்து வருகின்றோம்

308 0

நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை குறித்து ஆராய்ந்து வருவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

இனவாதத்தை தூண்டக்கூடிய விடயங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் உரையில் உள்ளதா என ஆராய்ந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் உரையில் அவ்வாறான விடயங்கள் காணப்பட்டால் ஹன்சாட்டிலிருந்து அவை அகற்றப்படும் எனசபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து சபை ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.