பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானம்!

312 0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு கொண்டு சென்று முக்கிய அமைச்சு பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றம் செல்வதற்கு 20வது திருத்தம் வழிவகுக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகிப்பதை தடுக்கும் வகையில் 19வது திருத்தத்தில் காணப்படும் கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20வது திருத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களில் ஜயந்த ஹெட்டாகொட என்ற அரசதரப்பு நடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி பசில் ராஜபக்சவுக்கு வழிவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பசில் ராஜபக்சவுக்கு முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அவர் வகித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவியே வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.