இராவண எல்லை பகுதியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு நால்வர் காயம்!

270 0

எல்ல, வெல்லவாய வீதியின் இராவண எல்லை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராவண எல்லை பகுதியில் இன்று(சனிக்கிழமை) காலை வான் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துக்கு முகம் கொடுத்த அனைவரும் ஆண்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.