முன்னாள் ஜனாதிபதிக்கு புதிய பதவி?

283 0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிர்வரும் அரசியலமைப்பின் ஊடாக பதவி ஒன்று வழங்குவதற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கட்சி தலைமையகத்தில் நேற்று  மாலை இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அரசியலமைப்பு தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக குழுவொன்றை நியமிக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால  டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.