தக்காளி, முட்டைகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுவன்

243 0

திருவண்ணாமலையை சேர்ந்த தர்ஷன் கொரோனா மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தக்காளி, முட்டைகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.

திருவண்ணாமலையை சேர்ந்த டாக்டர் ராஜாஹரிகோவிந்தன் மகன் தர்ஷன் (வயது 4). யோகாயாசனங்கள் கற்றுள்ளான். இந்த நிலையில் கொரோனா மற்றும் உடல் ஆரோக்கியத்தை பேணுவதன் அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தக்காளி, முட்டைகள் மீது அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினான்.

திருவண்ணாமலையில் நடந்த இந்த நிகழ்ச்சியை வக்கீல் ரொசாரியோ தொடங்கி வைத்தார். சிறுவன் தர்ஷன் தக்காளிகள் மேல் வைக்கப்பட்ட முட்டைகள் மீது அமர்ந்து 5 வகையான யோகாசனங்களை செய்து காண்பித்தான். சிறுவனின் சாதனை முயற்சியை அரசு டாக்டர் பாலமுரளி ஊக்குவித்து பரிசு வழங்கினார். இதில் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.