நுவரெலியாவில் இரு நிலையங்களில் கொள்ளை

250 0

நுவரெலியா- கொட்டகலை, வூட்டன் நகரில் அமைந்துள்ள சில்லறை கடை மற்றும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையம் ஆகியவற்றில் இன்று (வியாழக்கிழமை)  அதிகாலை,  சந்தேகநபர்கள் சிலரினால் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் சில்லறை கடையொன்றில் சிகரட், பணம்  மற்றும் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் சமையல் எரிவாயு நிரப்பும் நிலையத்தில் 70,000 ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கடைகளின் முன்புறத்திலுள்ள இரும்பு கதவை உடைத்து, முன்வழியாக கடைக்குள் சந்தேகநபர்கள் நுழைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.