நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் – சஜித்

243 0

ஜனநாயக ரீதியில் பதிவு செய்யப்பட்ட நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

9ஆவது நாடாளுமன்ற அமர்வில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்வர்தனவிற்கு வாழ்த்து தெரிவித்து தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “மாத்தறை ராகுல வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை கற்ற நீங்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டத்தைப் பெற்றுள்ளீர்கள். இதேபோன்று நாடாளுமன்ற செயற்பாடுகளிலும் உங்களுக்கு அதிக அனுபவமும் உண்டு.

உங்களது தலைமையில் நாடாளுமன்ற செயற்பாடுகள் பக்கசாற்பற்ற முறையில் முன்னெடுக்கப்படும்” என மேலும் தெரிவித்தார்.