சிறிலங்காவில் மின்சார துண்டிப்பு தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஒன்றுகூடவுள்ளது.
நாடளாவிய ரீதியில் நேற்றைய தினம் சுமார் 9 மணித்தியாலங்கள் மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.
அதன் பின்னர் இரவு 10 மணியளவில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியிருந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மின்சார துண்டிப்பு தொடர்பாக ஆராய்வதற்கு 7 பேர் அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என இந்த குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் மீள நிகழாமையை உறுதிசெய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மின்சக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.