சிறிலங்காவில் பொலிஸாருக்கு இலஞ்சம் வழங்கிய ஒருவர் கைது

327 0

சிறிலங்காவில் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு 2 இலட்சம் ரூபா இலஞ்சம் வழங்க முற்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 கிலோ கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதை தடுப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் வழங்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குறித்த நபர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.