எச்.ஐ.வி தாக்கத்திற்குள்ளானவர்களில் அதிகமானோர் வெளிநாட்டிற்கு தொழிலுக்காகச் சென்றவர்களே

309 0

hivஇலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் அதிகளவானவர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களில் 40 வீதமானோர் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றவர்கள் என்று புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு செயற்றிட்டத்தின் ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வை அடிப்படையாக கொண்டு வெளிநாடுகளில் தொழில் புரிந்துவிட்டு மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கான விசேட மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளதாக தேசிய சமூக நோய்கள் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு செயற்றிட்ட அமைப்பின் பணிப்பாளரும் மருத்துவருமான சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.