வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு

237 0

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த முதியவர் பயணமொன்று செல்வதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் வவுனியா புதிய பேருந்து நிலைய பகுதிக்குச் சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு தரித்துநின்ற இலங்கை போக்குவரத்து சபையின் மாகோசாலைக்கு சொந்தமான பேருந்து பின்னோக்கி நகர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, பேருந்தின் பின்னால் நின்றிருந்த முதியவர் மீது மோதியது.

இதனையடுத்து படுகாயமடைந்த முதியவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பாக வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.