சிறிலங்கா தொம்பேயில் விபத்து-தாய் மற்றும் மகள் உயிரிழப்பு

230 0

சிறிலங்கா தொம்பே பகுதியில் இடம்பெற்ற  வாகன விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் தாயும்  (42 வயது) மகளும் (19 வயது) உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் விபத்தில் பலத்த காயமடைந்த தாய் மற்றும் மகள் தொம்பே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி  உயிரிழந்ததுள்ளதாக பொலிஸார்மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் தொம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.