கலையரசன்தான் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பி.; நள்ளிரவு வெளியான வர்த்தமானி அறிவித்தல்

253 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தவராசா கலையரசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதை தேர்தல்கள் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அதி விசேடவர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களானஎன்.ஜே.அபேசேகர, என்.ரத்னஜீவன் எச்.ஹூல் ஆகியோரின் கையயாப்பங்களுடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளிலிருந்து தெரிவாகியுள்ள தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன